Showing posts with label aptitude. Show all posts
Showing posts with label aptitude. Show all posts
Tuesday, February 17, 2015
Monday, July 21, 2014
14. 88 winning words - Challenge
14. 88 winning words - Challenge
சவால் என்பது எல்லோர் வாழ்க்கையிலும் எப்போதும் நடப்பது இல்லை. அரிதாக நமக்குக் கிடைக்கும் வாய்ப்பு அது. அதனால் சவால் விடுவதற்கோ, சவாலை ஏற்பதற்கோ தயங்காதீர்கள். வெற்றி, தோல்வி என்பது வேறு விஷயம். நாம் ஒரு சவாலில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதே சுவாரஸ்யமான விஷயம்.
சிலர் எதற்கெடுத்தாலும் பந்தயம் கட்டுவார்கள். "இன்னைக்கு நமக்கு சினிமா டிக்கெட் கிடைக்காது.. என்ன பந்தயம்?" "மாலதி இன்னைக்கு மஞ்சள் புடவையில தான் வருவா! என்ன பந்தயம்?" "இன்னைக்கு இந்தியா தான் வின் பண்ணுது! என்ன பெட் கட்டற?" என்று எதற்கெடுத்தாலும் வெட்டியாகப் பந்தயம் கட்டிக்கொண்டிருப்பார்கள்.
அந்தப் பந்தயம் என்பது வேறு.. ஆனால் சவால் விடுவது வேறு. 'சாலன்ஞ்' என்பது மிகவும் ஆரோக்கியமான விஷயம். அது நம்முடைய முன்னேற்றத்திற்கு உதவக்கூடிய விஷயம். ஆரோக்கியமான சவால்கள், நமக்கு வேலையில் உற்சாகத்தைத் தருவதோடு, தன்னம்பிக்கையையும், வேலையின் சுறுசுறுப்பையும் அதிகரிக்கிறது. உதாரணமாக "இந்த ஒரு மாதத்தில் நான் இரண்டு கிலோ குறைந்து உடம்பை டிரிம்மாக வைத்துக்கொள்வேன்", "இன்னும் பத்து நாளில் கார் ஓட்டக் கற்றுக்கொள்கிறேன் பார்", "அந்த ப்ராஜெக்ட்டை இன்னும் 20 நாளில் முடித்துக்காட்டுகிறேன் பார்" என்றெல்லாம் சவால் விடுவது நம்முடைய முன்னேற்றத்திற்குக் காரணமாக அமைகிறது.
சவால் விடுவதற்கு எந்த அளவிற்கு தைரியம், தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம் வேண்டுமோ, அதே அளவிற்கு சவாலை ஏற்றுக்கொள்வதற்கும் தன்னம்பிக்கை, தைரியம், புத்திசாலித்தனம், உற்சாகம் அனைத்துமே வேண்டும். அதனால் இதோ உங்கள் வாழ்க்கையை முற்றிலும் மாற்றப்போகும் அடுத்த மந்திரச் சொல்லான "சவாலைச்" சரியாகப் பயன்படுத்துங்கள்.
When people
keep telling you that you can't do a thing, you kind of like to try it.
-
Margaret Chase Smith
To repeat
what others have said, requires education, to challenge it,
requires brains.
requires brains.
- Mary Pettibone Poole
Wednesday, July 2, 2014
9. 88 winning words - AWARENESS
Awareness
விழிப்புணர்வுடன் இருங்கள்
சுவாமி விவேகானந்தர் சொன்ன "பசித்திரு, தனித்திரு, விழித்திரு" என்பது மிகப்பெரிய வாழ்க்கைத் தத்துவம். வாழ்வில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு இளைஞனும் தெரிந்து கொள்ள வேண்டிய, பின்பற்ற வேண்டிய உண்மை.
இதில் இந்த "விழித்திரு" என்பது என்ன என்று இங்கே பார்க்கலாம். விழித்திருத்தல், விழிப்புணர்வுடன் இருத்தல் என்பது ஒரு மிகப்பெரிய தவம். தன்னைப் பற்றிய விழிப்புணர்வு, பிறரைப் பற்றிய விழிப்புணர்வு, சமுதாயத்தைப் பற்றிய விழிப்புணர்வு... இவைகள் இல்லாவிடில் நாம் சமுதாய ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விடுவோம். நீச்சலிட விழிப்புணர்வு மிக முக்கியம்.
முதலில் தன்னை உணருங்கள்
- தன்னுடைய புலனனுணர்வுகள்,
- உணர்ச்சிகள்,
- பலங்கள், பலவீனங்கள்,
- சமுதாயத்தில் தன்னுடைய நிலை,
என்று தன்னை ஒரு வேற்றாள் போல் எண்ணி, மதிப்பிட்டு விழிப்புணர்ச்சியோடு இருப்பவர்கள், ஜெயிப்பவர்கள். அவர்கள் எங்கேயும் மாட்டிக்கொள்ள மாட்டார்கள்.
பிறரை உணருங்கள்
- சக மனிதரின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வது
- அவர்களின் பலங்கள், பலவீனங்கள்,
- அவர்களுக்கும் தனக்குமான உறவின் பலம், பலவீனம்
- சமுதாயத்தில் அவர்களின் நிலை
சமுதாயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்
- சமூகம் செல்லும் வழி..
- நெறிகள், விதிமுறைகள்
- செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை
என்று சமூகத்தைப் பற்றிய விழிப்புணர்வும் கொண்டிருந்தால் இந்த சமுதாயத்தில் வல்லவராக வாழலாம்.
உன்னையே நீ உணர் - சாக்ரடீஸ்
[ Know thyself. ]
Tuesday, July 1, 2014
8. 88 WINNING WORDS - ATTITUDE
8. 88 WINNING WORDS - ATTITUDE
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு.
நம்முடைய மனநிலையே நம்முடைய வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம். நாம் எதுவாக ஆகவேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அதுவாகவே ஆகிறோம். நம்முடைய இன்றைய நிலைக்குக் காரணம் நம்முடைய மன நிலையே. இது போல் இல்லாமல் வேறு மாதிரி இருக்க வேண்டும் என்று நாம் நினைத்தால் அதுவும் சும்பமாக முடியும் ; நம்முடைய மனநிலையை மாற்றிக்கொள்வதன் மூலம்.
பி.எம்.ஏ - என்று அழைக்கப்படும் பாஸிட்டிவ் மென்டல் ஆட்டிட்யூட் பற்றி டேல் கார்னிஜி அற்புதமாக விளக்கியுள்ளார்.
உங்கள் அறிவல்ல, மனநிலையே உங்களின் உயரத்தை [மேம்பட்ட நிலையை] தீர்மானிக்கிறது
ஒரு வேலை என்று எடுத்துக் கொண்டால் "ஓ அதுவா, அதை நான் சிறப்பாகச் செய்து முடித்து விடுவேனே" என்று நினைத்தால், அது நிச்சயமாக உங்களால் முடியும். "ஐயோ அதை எப்படி முடிப்பேன், என்னால் முடியாதே" என்று நினைத்தால் உங்களால் முடியாது. இது படிப்பு, வேலை, வாழ்க்கை, காதல், வியாபாரம் என்று அனைத்திற்கும் பொருந்தும்.
சிறந்த மனநிலை கொண்டிருங்கள் வாழ்க்கையில் எப்போதுமே சிறந்த இடத்தில் இருப்பதை உணர்வீர்கள்.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு.
நம்முடைய மனநிலையே நம்முடைய வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம். நாம் எதுவாக ஆகவேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அதுவாகவே ஆகிறோம். நம்முடைய இன்றைய நிலைக்குக் காரணம் நம்முடைய மன நிலையே. இது போல் இல்லாமல் வேறு மாதிரி இருக்க வேண்டும் என்று நாம் நினைத்தால் அதுவும் சும்பமாக முடியும் ; நம்முடைய மனநிலையை மாற்றிக்கொள்வதன் மூலம்.
பி.எம்.ஏ - என்று அழைக்கப்படும் பாஸிட்டிவ் மென்டல் ஆட்டிட்யூட் பற்றி டேல் கார்னிஜி அற்புதமாக விளக்கியுள்ளார்.
It is your attitude, not
your aptitude, that determines your altitude. - Zig Ziglar
உங்கள் அறிவல்ல, மனநிலையே உங்களின் உயரத்தை [மேம்பட்ட நிலையை] தீர்மானிக்கிறது
You are WHAT you are, You
are WHERE you are, because of what you put in your mind. You can CHANGE what
you are, You can CHANGE where you are, by changing what you put in your mind. -
Zig Ziglar
You are what you think. Napolean Hill
ஒரு வேலை என்று எடுத்துக் கொண்டால் "ஓ அதுவா, அதை நான் சிறப்பாகச் செய்து முடித்து விடுவேனே" என்று நினைத்தால், அது நிச்சயமாக உங்களால் முடியும். "ஐயோ அதை எப்படி முடிப்பேன், என்னால் முடியாதே" என்று நினைத்தால் உங்களால் முடியாது. இது படிப்பு, வேலை, வாழ்க்கை, காதல், வியாபாரம் என்று அனைத்திற்கும் பொருந்தும்.
சிறந்த மனநிலை கொண்டிருங்கள் வாழ்க்கையில் எப்போதுமே சிறந்த இடத்தில் இருப்பதை உணர்வீர்கள்.
Subscribe to:
Posts (Atom)




