Showing posts with label awareness. Show all posts
Showing posts with label awareness. Show all posts

Wednesday, March 11, 2015

தள்ளிப்போடாதே! தன்னம்பிக்கை நூல் வரிசை - 3

தள்ளிப்போடாதே!


நம்முடைய சோம்பலினால் எவ்வளவோ விஷயங்களை ஒவ்வொரு நாளும் நாம் தள்ளிப்போடுகிறோம். அவற்றைச் அன்றன்றைக்கே செய்திருந்தால் இன்று நம் நிலையே வேறு. அது மிகப்பெரிய உண்மை.
நாம் கசப்புடன் உணரும் உண்மை.

நாம் தள்ளிப்போடுவது... வேலைகளை அல்ல..
நமது வெற்றியை..! நமது எதிர்காலத்தை!

செயல்களை, முயற்சிகளை, வாய்ப்புகளைத் தள்ளிப்போடாமல் வெற்றிச் சிகரம் தொடுவது எப்படி
என்பதை இந்தப் புத்தகம் உங்களுக்குக் கற்றுத்தருகிறது.
இப்புத்தகத்தை வாங்குவதையும்,
உடனே படிப்பதையும் தள்ளிப்போடாதீர்கள்.

சிலருக்குத் தள்ளிப்போடுவது என்றால் என்ன என்று புரியாமலே விஷயங்களைத் தள்ளிப்போட்டுக் கொண்டிருப்பார்கள். இதனால் முதலில் நீங்கள் தள்ளிப்போடுதல் என்றால் என்ன என்று உணர வேண்டும்.

நாம் செய்ய வேண்டிய அவசியமான வேலைகளைச் செய்யாமல் தவிர்த்துக் கொண்டிருப்பது தள்ளிப்போடுதல்.
நாம் மிகவும் ஆசைப்படும் விஷயங்களைச் சில காரணங்களால் செய்யாமலே இருப்பதும் தள்ளிப்போடுதல் தான்.

அலுவலகத்திலோ, வீட்டிலோ நாம் முடிக்க வேண்டிய வேலைகள் என்று சில இருக்கும். அதனை எப்படியானாலும் நாம் தான் செய்து முடிக்க வேண்டியதிருக்கும். இந்த மாதிரி வேலைகளை, பல வித காரணங்களாலும் சோம்பலாலும் நாம் தள்ளிப்போடுகிறோம். இவ்வாறு தள்ளிப்போடும் வேலைகள் மலை போல் குவிந்து நம்மைப் போட்டு அமுக்கும்.

இதனைக் கற்பனை செய்து பாருங்கள். ஒரு பனிப்பிரதேசத்தில் உங்களுடைய வீடு இருக்கிறது. அங்கே வருடம் முழுதும் பனி பெய்கிறது. தினமும் பத்து செ.மீ வரை வீட்டின் மேலும், சாலையின் மேலும் பனி பெய்து மூடியிருக்கும். தினமும் இந்த பத்து செ.மீ பனியை நீங்கள் அகற்றினால் தான் தொடர்ந்து வீட்டில் இருக்கவோ, சாலையைப் பயன்படுத்தவோ முடியும். நாளை பார்த்துக்கொள்ளலாம், நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று ஒரு ஆறு நாட்கள் நீங்கள் தள்ளிப்போட்டால் என்ன ஆகும். பனி இரண்டடி உயரத்திற்கு வீட்டின் மேலும் சாலையின் மேலும் படர்ந்து மூடியிருக்கும். அப்போது வேலை செய்வது இன்னும் கடினம்.

ஒரு பதினைந்து நாள் செய்யாமல் விட்டு விட்டால், ஒரு மாசம் செய்யாமல் விட்டு விட்டால் பனி நம்மையும், வீட்டையும் மூடிவிடும் என்பதே உண்மை. அதே போல் தான் வேலைகளும். செய்யாமல் விட விட அவை பெரும் சுமையாக நம் மேலேயே இருக்கின்றன. அவற்றை நாம் தவிர்ப்பதனால் அவை தானாகவே நடைபெறும் சாத்தியமில்லை. சில வேலைகளில் அதிசயமாகப் பிறர் நமக்காக உதவலாம். அல்லது வேறு ஏதேனும் அதிசயங்கள் நடக்கலாம். ஆனால் இது எப்போதுமே சாத்தியமில்லை. அதனால் தள்ளிப்போடுவது என்பது நம் மேல் நாமே சுமைகளை ஏற்றிக் கொள்வது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

இரண்டாவது விஷயம், நிதானமாக யோசித்து, சரியான தருணத்திற்காகக் காத்திருந்து ஒரு வேலையைச் செய்தல். இதனை "தள்ளிப்போடுவதோடு" ஒப்பிட்டு நாம் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.

சில விஷயங்களை அலசி ஆராய்ந்து, சாத்தியக் கூறுகளை எல்லாம் கண்டறிந்து, வெற்றி, தோல்வி சதவீதங்களைக் கணக்கிட்டுச் சரியான நேரத்தில் தான் செய்ய வேண்டும். அது தள்ளிப்போடுதல் கிடையாது. காட்டில் பயணம் செய்யும் போது, பாதை தெரிய வேண்டும் என்று விரும்பினால், மிருகங்கள் தாக்காமல் பாதுகாப்பாகப் பயணத்தைத் தொடர வேண்டும் என்று ஆசைப்பட்டால் காலை வரை நம் பயணத்தைத் தள்ளிப்போட்டுத்தான் ஆக வேண்டும். இது தள்ளிப்போடுதல் இல்லை. திட்டமிடுதல். ஆனால் காட்டுப் பயணம் ஆபத்தானது என்று எப்போதுமே தள்ளிப்போடுவது தான் "தள்ளிப்போடுதல்".

உடலில் ஒரு நோய் வந்து விட்டால், அதனை உடனடியாக மருத்துவரிடம் காட்டிப் பரிசோதித்து அதற்கான மருந்தினை உட்கொண்டுவிட வேண்டும். அதில் நாம் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தால் அந்த நோய் நம் உயிரையே பறிக்கும் ஆபத்து இருக்கிறது. அதனால் தள்ளிப்போடுதல் என்றால் என்னவென்று நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அந்த விஷயங்களைத் தள்ளிப்போடாமல் செய்ய வேண்டிய நேரத்தில் செய்யப் பழகுங்கள்.

எத்தனையோ பேரின் வாழ்க்கையை மாற்றிய இந்த நூலினை வாங்கிப் படியுங்கள்...
உங்கள் வாழ்க்கை கண்முன்னே சிறப்பாக மாறுவதை நீங்களே உணர்வீர்கள்!


பேரா. எஸ். லாரன்ஸ் ஜெயக்குமாரின் 
தன்னம்பிக்கை நூல் வரிசை - 3
தனிப்பிரதி ரூ. 60 (தபால் செலவு உண்டு)
மொத்த பிரதிகள் 50 முதல் 100 வரை
தபால் செலவு இல்லை மேலும் 10% கழிவும் உண்டு.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு,
இளைஞர்களுக்கு, விழாக்களுக்குப்
பரிசளிக்க அற்புதமான நூல்!

புத்தகம் தொடர்பான விவரங்களுக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்
9884264877

 ==================================================================

Thursday, July 17, 2014

13. 88. WINNING WORDS - CARE கவனம் / அக்கறை

13. 88. WINNING WORDS - CARE
கவனம் / அக்கறை



எப்போதுமே கவனமாக இருங்கள். செய்கின்ற ஒவ்வொரு செயலும் உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். கவனம் இல்லாமல் செய்யும் காரியங்கள் தவறாக முடியும், சரியாக முடிந்தாலும் அரைகுறையாய் மனத்திருப்தி இல்லாமல் முடிந்திருக்கும். அதனால் நாம் செய்கின்ற சிறு சிறு செயல்களில் கூடக் கவனம் செலுத்துங்கள். சிணீக்ஷீமீறீமீssஸீமீss இருக்கவே கூடாது. தண்ணீர் குடிப்பதில் கூட கவனமாகக் குடித்தால் தான் புரையேறாது.

இவ்வாறு கவனம் செலுத்த முடியாமல் இருப்பதற்குக் காரணம்
Pre Occupied Mind - வுடன் நாம் இருப்பதே. எப்போதுமே ஒன்றைச் செய்யும் போது வேறொன்றை நினைத்துக் கொண்டு, செய்வதைச் சரியாகச் செய்யாமல் விட்டு விடுவோம். இதனை முதலில் களைய வேண்டும்.
கருமமே கண்ணாயினார்.

இரும்பை மெழுகாக்கும் மந்திரம்.

இன்னொரு கவனமும் இருக்கிறது. அது அக்கறை. பிறரின் மேல் அக்கறை எடுத்துக் கொள்வது. இது இல்லாமல் தான் இந்த பூமியே அல்லாடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரிடமும் அக்கறை கொள்ளுங்கள். உங்களிடம் கோபப்படுபவரிடம், நோயுற்றவரிடம், உங்களை அலட்சியப்படுத்துபவரிடம் அனைவரிடமும் அக்கறை செலுத்துங்கள். ஏன் எதிரிகளிடம் கூட நீங்கள் உண்மையான அக்கறை செலுத்தினால் அவர்களை விடச்சிறந்த நண்பர்களை நீங்கள் பெற முடியாது.

மிக மிகக் கோபமாக இருப்பவரிடம், அவர் தான் டெரர் என்பது போல் இருப்பவரிடம் அன்பாகக், கனிவாக, ஆதரவுடன் பேசிப் பாருங்கள்... முதலில் கத்துவார்கள்.. இரண்டு முறை, மூன்று முறை அவர்கள் மேல் உண்மையான அக்கறையுடன் தான் நீங்கள் பேசுகிறீர்கள் என்று அவர்கள் உணர்ந்து விட்டால் போதும்.. மெழுகாய் மாறி விடுவார்கள். அனைவருமே மனதிற்குள் மனிதர்கள் தான். குழந்தைகள் தான். தங்கள் மேல் அன்பு செலுத்த, அக்கறை செலுத்த ஆள் இல்லையா என்று தவிப்பவர்கள் தான். அதனால் உங்களின் உண்மையான அக்கறை என்பது உலகையே வெல்லும் அருமருந்து.

Wednesday, July 2, 2014

9. 88 winning words - AWARENESS


Awareness 
விழிப்புணர்வுடன் இருங்கள்


சுவாமி விவேகானந்தர் சொன்ன "பசித்திரு, தனித்திரு, விழித்திரு" என்பது மிகப்பெரிய வாழ்க்கைத் தத்துவம். வாழ்வில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு இளைஞனும் தெரிந்து கொள்ள வேண்டிய, பின்பற்ற வேண்டிய உண்மை.

இதில் இந்த "விழித்திரு" என்பது என்ன என்று இங்கே பார்க்கலாம். விழித்திருத்தல், விழிப்புணர்வுடன் இருத்தல் என்பது ஒரு மிகப்பெரிய தவம். தன்னைப் பற்றிய விழிப்புணர்வு, பிறரைப் பற்றிய விழிப்புணர்வு, சமுதாயத்தைப் பற்றிய விழிப்புணர்வு... இவைகள் இல்லாவிடில் நாம் சமுதாய ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விடுவோம். நீச்சலிட விழிப்புணர்வு மிக முக்கியம்.

முதலில் தன்னை உணருங்கள்
- தன்னுடைய புலனனுணர்வுகள்,
- உணர்ச்சிகள்,
- பலங்கள், பலவீனங்கள்,
- சமுதாயத்தில் தன்னுடைய நிலை,
என்று தன்னை ஒரு வேற்றாள் போல் எண்ணி, மதிப்பிட்டு விழிப்புணர்ச்சியோடு இருப்பவர்கள், ஜெயிப்பவர்கள். அவர்கள் எங்கேயும் மாட்டிக்கொள்ள மாட்டார்கள்.

பிறரை உணருங்கள்
- சக மனிதரின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வது
- அவர்களின் பலங்கள், பலவீனங்கள்,
- அவர்களுக்கும் தனக்குமான உறவின் பலம், பலவீனம்
- சமுதாயத்தில் அவர்களின் நிலை

சமுதாயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்
- சமூகம் செல்லும் வழி..
- நெறிகள், விதிமுறைகள்
- செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை
என்று சமூகத்தைப் பற்றிய விழிப்புணர்வும் கொண்டிருந்தால் இந்த சமுதாயத்தில் வல்லவராக வாழலாம்.
உன்னையே நீ உணர் - சாக்ரடீஸ்
[ Know thyself. ]